என்.கே. மகாலிங்கம் அறுபதுகளில் ஈழத்தில் எழுதிய தா.இராமலிங்கத்தின் கவிதை உலகம் மற்றக் கவிஞர்களிலிருந்து மிக மிக வித்தியாசமானது. காரணம், அவர் புதுக் கவிதைகளை எழுதியது மட்டுமல்ல, அக்காலத்தில் மரபுக் கவிதைகள் எழுதிய எவருமே நினைத்தும்; பார்க்காத, தொடத் தயங்கிய கருப் பொருளையும் தன் கவிதைகளில் கையாண்டதும் தான். அவரின் கவிதைகளில் மூன்று குணாம்சங்கள் மேலோங்கி நிற்கின்றன. ஒன்று, காமம். இரண்டாது, ஆசாரம் அல்லது ஒழுக்கம் அல்லது பண்பாடு. அதாவது, யாழ்ப்பாணக் கலாசாரத்தின் போலி ஒழுக்கம். குறிப்பாக, காமம் சார்ந்தது. மூன்றாவது, அடக்குமுறையைக் கண்ணுற்றதால் ஏற்பட்ட இனவுணர்வு. நாலாவது ஒன்றும் உள்ளது. அது சரியாக வெளிவரவில்லை. அதாவது, அவருடைய ஆன்ம விசாரமும் அனுபவமும். சிறுகதை, நாவல்களில் காமம் சார்ந்த யாழ்ப்பாணக் கலாசாரத்தைக் கருப்பொருளாகக் கையாண்டவர்கள் எஸ்.பொன்னுத்துரை, மு.தளையசிங்கம், கே.டானியல், பவானி ஆழ்வாப்பிள்ளை என்றால் கவிதையில், அதுவும் புதுக் கவிதையில், காமத்தை கருப்பொருளாக பெரும்பாலான கவிதைகளில் வெளிப்படுத்தியவர் தா.இராமலிங்கம். அவர் கடந்த மாதம் தன் எழுபத்து ஐந்தாவது வயதில் கிளிநொச்சியில்